Monday, May 18, 2009

போட்டு அம்மான் நடேசன் பானு ஆகியோரின் மனைவிமார்கள்; இவர்களின் இறப்பை உறுதிசெய்துள்ளனர்




புpரபாகரனின் வலது கையாகிய பொட்டுஅம்மான் அல்லது பபா அல்லது ஓஸ்கார் அல்லது பு அல்லது சோபிகமூர்த்தி அல்லது கைலான் அல்லது சிவசங்கர் அல்லது சண்முகநாதன் என்று பல பட்டம் பெற்றவர்.மற்றயது பானு பின் அல்லது பிறாவோ அல்லது சிவநாதன் அல்லது சோமசேகரன் போன்ற பட்டப்பெயர்கள் செல்லப்பெயர்களைக்கொண்டவர். இவர்கள் மூவரும் கொல்லப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. போட்டு அம்மான் 1998ம் ஆண்டு தலதா மாளிகைக்கு குண்டுவைத்தமைக்காகவும் 1992 ஒக்டோப்ர் 27ல் சாவகச்சேரி பொலிஸ்ஸ்ரேசனைத்தாக்கியமை 1987-1989 இந்திய அமைதிப்படைக்கு எதிரான தாக்குதல்கள் மட்டக்களப்பில் மற்றும் அம்புஸ் அமைதிப்படைக்கு எதிரான தாக்குதல்கள் உமையாள்புரத்திலும் 1984ல் குரநகரில் பாதுகாப்புபடைகளின் தலைமைப்பீடத்தை தாக்கியமை மற்றும் 1990ல் இபிஸ் காம்பைத்தகாக்கியமை போன்ற குற்றங்களும் மற்றும் பல உள்நாட்டு வெளிநாட்டு குற்றச்செயல்களிலும் சம்பந்தப்பட்டுள்ளார்.மேலும் 1991ல் இந்தியப்பிரதமர் ராஜிவ்காந்தியை கொலைசெய்ததிலும் இவர் கைவண்ணமே .1993 ஓகஸ்ட் 3ம் திகதி மாத்தையாவையும் அவரது நூற்றுக்கணக்கான ஆதரவாளர்களையும் கைதுசெய்ததும் சிறுகச்சிறுக கொலைசெய்ததும் இவர்தான்.1996 ஜனவரி 31ல் இலங்கை மத்தியவங்கிக்கு குண்டுவைத்ததும் இந்தப்பெருமானார்தான்.அமிர்தலிங்ம் யோகேஸ்வரன் பத்மனாபா போன்றோரை கொலைசெய்து ரத்தம் குடித்தவர் இந்த பொட்டுஅம்மான்.


No comments:

Post a Comment