Saturday, January 31, 2009

உடையார்கட்டில் புலிகளின் நீர்மூழ்கி, தற்கொலைப் படகுகள் மீட்பு

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள, உடையார் கட்டுப் பிரதேசத்தில் இன்று (29) காலை படையினர் நடத்திய சோதனையின் போது தமிழீழ விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான நீர்மூழ்கி ஒன்றைக் கண்டு பிடித்துள்ளனர்.இராணுவத்தின் இரண்டாவது படையணியே இந்த நீர்மூழ்கியைக் கண்டு பிடித்தனர். இதன் நீளம் 35 அடியைக் கொண்டது.மேலும் புலிகளின் தற்கொலைப் பிரிவுக்குச் சொந்தமான மூன்று படகுகளும் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டன. தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறப்பு உறுப்பினரான வே. பாலகுமாரன் இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் காயமடைந்த நிலையில் தீவிர மருத்துவ சிகிச்சைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.கடந்த திங்கட்கிழமை (19) உடையார்கட்டுப் பிரதேசத்தில் படையினர் மேற்கொண்ட தாக்குதலின் போதே அவர் படுகாயமடைந்ததாகத் தெரிய வருகிறது.ஆனால் அவர் எந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாரென்ற தகவல்கள் வெளியிடப்படவில்லை. விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் எதிர்வரும் சில வாரங்களில் கைதுசெய்யப்பட்டு விடுவார் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்தார். பிரபாகரன் முல்லைத்தீவுக் காட்டுக்குள் பதுங்குகுழிகள் மாறி மாறி ஒழிந்திருப்பதாக இந்தியாவின் டைம்ஸ்நௌவ் தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியில் அவர் கூறினார்.எதிர்வரும் வாரங்களில் பிரபாகரனின் எதிர்காலம் என் என்பதை உலகம் அறிந்துகொள்ளும் என கோதபாய தனது செவ்வியில் குறிப்பிட்டார்.“முன்னரங்கப் பகுதிகளிலிருந்து அவர் கட்டளைகளை வழங்கவில்லை. பதுங்கு குழிகளுக்குள்ளேயே அவர் இருக்கிறார். அவர் இறந்துவிட்டாரா அல்லது வேறு நாட்டுக்குத் தப்பியோடிவிட்டாரா என்பது எதிர்வரும் 2-3 வாரங்களில் தெரியவரும். குழிக்குள் இருந்துகொண்டு அவரால் என்ன செய்யமுடியும்?” என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கூறினார்.

வன்னிச் சிவிலியன்கள் கொல்லப்படுவது எதனால்...

கட்டுரையை எழுதும்போது படையினர் விசுவமடுச்சந்தியையும் கைப்பற்றியுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன எனவே விடுதலைப்புலிகளின் நடவடிக்கைகள் யாவும் மிகக்குறுகிய பிரதேசத்தினுள்ளே முடக்கப்பட்டு விட்டன. இனியும் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்கள் என்ற வாதங்கள் யாவும் கருத்தாய்வுகளுக்க பொருத்தமற்றவையாக அமைந்தவிடும். எனவே இப்பொழுது இலங்கை இராணுவத்தினரால் விடுதலைப்புலிகள் சுற்றிவளைக்கப்பட்டுள்ளனர் என்ற விடையமே பொருத்தமானது.இரண்டாயிரத்து அறுநூறு சதுரகிலோமீட்டர் பரப்பளவை கொண்ட கிளிநொச்சி மாவட்டத்தின் மக்கள் தொகையினர் ஒருலட்சத்து முப்பதினாயிரம் பேராகும், இரண்டாயிரம் சதுரகிலோமீட்டர் பரப்பளவில் வசித்து வந்த முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் தொகையினர் சுமார் ஒருலட்சத்து இருபதினாயிரம் பேராவர், மன்னார் மாவட்டத்தின் அரைவாசியில் அறுநூறு கிலோமீட்டர் சுற்றளவில் வசித்து வந்த மக்கள் தொகையினர் கிட்டத்தட்ட ஐம்பதினாயிரம் பேர் என மொத்தமாக மூன்று லட்சத்துக்கு மேலான மக்கள் பாதுகாப்புத் தேடி ஓடியோடி கடைசியில் வந்து ஒளிந்து கொண்ட இடம் வெறும் 333 கிலோமீட்டர்களேயாகும். இதனைத்தாண்டி அவர்கள் வேறு எங்கும் செல்லமுடியாது. இவ்வாறு அவர்கள் கடைசியாக வந்து தங்கியிக்கும் பிரதேசத்தைதான் நீங்கள் முக்கோண வடிவில் மேலுள்ள படத்தில் காண்கின்றீர்கள் இம்முக்கோணத்தின் ஒருபக்கம் கடலால் சூழ்ந்திருக்க அதன் மறு இருபக்கங்களும் இலங்கை இராணவத்தினரால் சுற்றி வளைக்கப்பட்டிருக்கின்றது. இதுதான் இன்றைய உண்மையான களநிலவரம். இது எத்தனைபேருக்கு தெரியும் என்பது கடவுளுக்குத்தான் வெளிச்சம் அதனால்தான் சற்று வெளிச்சம் போட்டு காட்டப்பட்டுள்ளது. இதை நம்ப மறுப்பபவர்கள் நம்மில் ஏராளம். எனினும் நம்புபவர்கள் நம்புங்கடாடோய்!! இன்டெர்நெட் பாவனையாளர்கள் கூகிள்ஏர்த் மூலம் ஏ35 பாதையை நோக்கி இப்பிரதேசங்களை பார்வையிட்டால் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பிரதேசங்களில் அவர்கள் எவ்வாறான பாதுகாப்பு முயற்சிகளை மேற்கொள்ள முடியும் என்பது பற்றிய உண்மையை தெளிவாக உணர முடியும்.
இதையேன் நான் இங்கே குறிப்பிடுகின்றேன் என்றால் தலைவர் இனித்தான் உள்ளே விட்டு அடிப்பார் என்று எதிர்பார்ப்பவர்களுக்கான சில விளக்கங்களை கொடுப்பதற்காகவே இவ்விபரங்களை அறியத்தருகின்றேன். (உள்ளே விட்டு அடிப்பதாக சொல்லி கடைசியில் தண்ணியை வெளியே விட்டதுதான் மிச்சம். நான் கல்மடு குளத்துதண்ணியை குறிப்பிட்டேனப்பா!) ஏ35 பாதையின் இருமருங்கிலும் இருந்து நீண்ட தூரத்திற்கு மிகப்பெரிய வயல் வெளிகளையும் ஆங்காங்கே சிறுசிறு காடுகள் மற்றும் குடியிருப்புக்கள் தவிர்ந்த வேறு எதனையும் அங்கு காண முடியாது. விடுதலைப்புலிகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கான புவியியல் வளங்களோ அன்றி அவர்களது பாதுகாப்புக்கு ஏதுவான இதரகாரணிகளோ எதுவும் இப்பிரதேசத்தினுள் இல்லை. எனவே அவர்களது பாதுகாப்பு என்பது இப்பொழு நான் ஏற்கனவே கூறியுள்ள அந்த மூன்று லட்சம் மக்களிலேயே தங்கியுள்ளது என்பதனை நன்கு புரிந்து கொள்ள முடியும்.
இலங்கை இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்ட விடுதலைப்புலிகளின் பிரதேசத்தினுள் தங்கியிருக்கும் மக்கள் மீதான அரச படையினரின் எறிகணைத் தாக்குதல்களில் இதுவரையில் 300 க்கும் அதிகமான சிவிலியன்கள் இறந்துபோயுள்ளனர். இங்குள்ள மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்படாது தொடர்ந்தும் இப்பகுதிக்குள் தொடர்ந்தும் யுத்தம் இடம்பெறுமானால் இழப்புக்கள் இன்னும் பல ஆயிரங்களைத் தாண்டும் என்பதில் சந்தேகம் கொள்ளதேவையில்லை. விடுதலைப்புலிகள் எந்த திசையில் இருந்து தாக்குதல்களை மேற்கொள்கின்றார்களோ அதே திசையை நோக்கியே அரசபடையினரும் தமது எறிகணைகுண்டுவீச்சுக்களை நடாத்துகின்றார்கள் இவ்வாறான எறிகணை வீச்சுக்களாலேயே சாதாரண சிவிலியன்கள் கொல்லப்படுகின்றனர். விடுதலைப்புலிகள் சிவிலியன்களின் மத்தியில் நின்று கொண்டு இலங்கை இராணுவத்தினருக்கு எதிரான தாக்குதல்களை மேற்கொள்ளாதிருப்பர்களானால் சாதாரண சிவிலியன்களின் இழப்புக்களை தவிர்க்கமுடியும்;.
எனவே இந்த அடிப்படையில் சர்வதேசங்களின் பொதுவான பார்வை விடுதலைப்புலிகள் மீதே பாய்கின்றது. மக்களை பாதுகாப்பான இடங்களைநோக்கி வெளியேற விடுதலைப்புலிகள் அனுமதிக்க வேண்டும் என சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் போன்ற அமைப்புக்கள் விடுத்த அறிக்கைகள் எதனையும் விடுதலைப்புலிகள் உள்வாங்கியதாக தெரியவில்லை. எனவே மக்களுக்கு பாதிப்பில்லாமல் யுத்தம் இடம் பெறவேண்டுமானால் கண்டிப்பாக அதற்கு விடுதலைப்புலிகள்தான் கருணை காட்ட வேண்டும். தமது சொந்த மக்கள் மீது விடுதலைப்புலிகள் கருணை காட்டி அவர்களை வெளியேற விடாத வரையிலும் விடுதலைப்புலிகள் மீதான தாட்சண்யத்தையும் எந்த சர்வதேசநாடுகளும் முன்னெடுக்க முன்வராது. வன்னி மக்களை இலங்கை இராணுவத்தினர் கொன்று குவிக்கின்றார்கள் என்ற உண்மையை எந்த தமிழின உணர்வாளனும் மறுக்கமுடியாது. ஆனால் அவ்வாறு மக்கள் இறப்பதற்கு காரணம் விடுதலைப்புலிகள் தான் என்ற உண்மையை ஏற்றுக் கொள்ள மறுப்பவர்கள் அனைவரும் புலம் பெயர் வாழ் புலி விசுவாசிகள்தான் என்று சொன்னால் அது மிகையாகாது.
எனவே வன்னி மக்கள் பாதுகாக்கப்பட வேண்டுமானால் அதற்கு மிகச் சாதரணமான ஒரே ஒரு வழி அதாவது மக்களை வெளியேற புலிகள் அனுமதிக்கவேண்டும் அவ்வாறு அனுமதிக்காத பட்சத்தில் அவர்கள் மீதான அழுத்தங்கள்; பிரயோகிக்கப்படவேண்டும். அதை விட்டு விட்டு என்னுடைய வீட்டு யன்னல் வழியாக சும்மா போன ஆமிக்கு குண்டை எறிந்தால் ஆமிவந்து அப்பாவுக்குத்தான் அடிப்பான் என்று என்னுடைய 3 வயது குழந்தைக்கே புரிகின்றவிடையம் அதற்காக அமிஅடிக்கின்றான் அடிக்கின்றான் என்றா கத்தமுடியும். நாதாரிப்பயல் எவன் என்ரை வீட்டுக்குள் நின்று குண்டை எறிந்தானோ அவனைத்தான் திட்டமுடியும்.

புலிகளின் அழிவும் இனி செய்யப்படவேண்டியவையும்

வசிட்டர்உலகின் இரண்டாவது பெரிய இரானுவத்தை வெற்றி கொண்டதாக இறுமாந்திருந்த புலிகள் இன்று உலகில் மிகச்சிறிய ராணுவத்திடம் தோற்றுப்போகின்றது. புலிகள் தோற்றுப்போவது தற்போதைய நிலையில் அவசியமான ஒன்றுதான் என்பதை புலம்பெயர்ந்த புலி ஆதரவாளர்களை தவிர நாட்டில் புலியின் அராஜகத்திற்குள் சிக்கித் தவித்த அனைத்து மக்களும் எதிர்பார்த்தார்கள்.இந்திய ராணுவத்தை வெற்றிகொண்டதன் பின்புலத்தை பிரபாகரன் என்றுமே திரும்பிப்பார்த்ததில்லை. அந்த வெற்றியின் முதற்காரணம் மக்கள்தான். புலிகள் தங்கள் வழமையான இராணுவ தந்திரோபாயங்களை ( மக்கள் செறிந்து வாழும் இடங்களில் ராணுவத்தின் மேல் குண்டெறிந்து வி;ட்டு ஓடுவதுஇ துப்பாக்கிப் பிரயோகம் செய்து விட்டு ஓடுவது.) பாவித்தல் மூலம் ராணுவத்தை ஆத்திரமூட்டி அவர்கள் மக்கள் மேல் தங்கள் அராஜகங்களை செய்யும் போது அப்பாவி மக்களும் இவர்களுக்கு புலிகள்தான் சரி என்ற முடிவுக்கு வந்து புலிகளை தங்கள் ஆபத் பாந்தவர்களாக நினைக்கத் தொடங்கி விடுவதும் அதனால் புலிகளுக்கு ஆட்கள் சேருவது முதலஇ; உதவிகள் இ உணவுஇ மறைவிடம் என்பனபோன்றவற்றையும் தாராளமாக செய்தார்கள். ஆனால் தற்போது உள்நாட்டில் புலம் பெயர்ந்;த யாழ்ப்பாண மேட்டுக்குடி தமிழர்களில் பெரும் பாலானவர்கள் மீண்டும் யாழ்ப்பாணத்திற்கும் கொழும்பிற்கும் வவுனியாவிற்கும் சென்றுவிட. ஒரு குறைந்த எண்ணிக்கையான யாழ்ப்பாணத்தவரும் மிகுதியாக வன்னி மக்களுமே புலிகளிடம் மாட்டுப்பட்டிருந்தார்கள். இவர்கள் வெளிஉலகமே தெரியாத கிணத்துத் தவளைகளாகவே வாளவேண்டிய துர்ப்பாக்கிய நிலையாயிற்று. புலிகளின் வன்னிப் பிரதேசம் வெளிநாடு வாழ் உல்லாசப்பயணிகளான தமிழர்களை கவரும் வகையில் கோட்டல்களும் பளிங்கு கற்களால் ஆன கல்லறைகளும் பூப்பாத்திகளும் அமைக்கப்பட்டன. உல்லாசிகளும் இதை மட்டுமே பார்த்துவிட்டு வந்து ஆகா வெளிநாடுமாரி புலி வைத்துள்ளது என்ற வண்ணம் டொலர்களில் கொஞ்சம் பிச்சையும் போட்டு வர்தார்கள். ஒருவராவது ஏ 9 வீதியில் இருந்து ஒரு இரண்டு கிலோ மீற்ரர் உள்சென்று பார்க்க நினைக்கவும் இல்லை புலிகளால் பார்க்க விடப்படவுமில்லை. பார்த்திருந்தால் வாய்திறக்க உரிமையின்றி இ தொழில் வசதி எதுவுமின்றி தங்கள் வாழ்வாதாரத்திற்கு புலிகளிடம் பிச்சை எடுத்து உண்ணும் நிலை என்பது விளங்கியிருக்கும். அரச உத்தியோகத்தவர்கள் கூட இலங்கை அரசிடம் சம்பளம் பெற்றுக்கொண்டு ( அதிலும் புலிக்கு வரி கொடுத்து விட்டு) புலியின் கட்டளைக்கு சேவை செய்தார்கள். பிள்ளைகள் பலவந்தமாக இணைக்கப்பட்டார்கள் இவை எல்லாம் மக்கள் மனங்களில் கொதித்துக்கொண்டிருந்தது. இப்போது அவர்கள் புலிகளைக் காட்டிக்கொடுக்கும் நிலைதான் உள்ளது இது நியதி. இதுதான் இன்று ராணுவம் வெற்றி கொண்ட முதற்காரணம்.இரண்டாவது புலிகளில் பல திறமையான இடைநிலை தலைவர்கள் இருந்தார்கள். ( அவர்களும் அரசியல் மயப்படாத வெறும் இயந்திர திறமை மட்டும் உள்ளவர்கள்தான்.) குறிப்பாக கருணாஇ மாத்தையாஇ அவர்களோடு சேர்தவர்கள். இவர்களின் திட்டமிடல் போராட்ட வழிமுறைகளால் பெற்ற வெற்றிகளையெல்லாம் பிரபாகரன் தன்னுடைய நேரடித் திட்டமிடலும் நெறியாள்கையும் என்று வெளிநாட்டு தமிழர்களுக்கு சொல்லி. தட்டிக் .கொடுக்கப்பட வேண்டிய சிறந்த போராளிகளை துரத்திக்கலைத்து விட்டு அல்லது கொன்றுவிட்டு அடுத்தநகர்வை திட்டமிட முடியாமல் போனது. ( பிரபாகரனின் திட்டமிடலை பொலிஸ் கான்ஸ்டபிளை சுட போன போதே நாங்கள் அறிந்தவர்கள். அன்று பாலா என்ற போராளி இல்லையென்றால் அன்றே அவருக்கு பாலூற்றப்பட்டடிருக்கும் ) இந்த நேரத்தில் நினைவூட்ட விரும்புவது ஆனையிறவு முகாம் தாக்குதல். பிரபாகரனின் திட்டமிடலில் தொடங்கி ஜநூறு போராளிகள் மாட்டுப் பட்டு நின்றபோது எல்லாம் முடிந்ததென தலைவர் கைவிரிக்க கருணா தலைமையில் கிழக்கு வடக்குப் போராளிகள் இணைந்து கருணாவின் திட்டமிடலில் போராளிகளை மீட்டது மட்டுமல்லாது வெற்றியும் கொண்டது. அதன் பின்பும் அந்த வெற்றியையும் தானே சூட்டிக்கொண்டது. இது உள்ளக போராளிகளுக்கு விழுந்த மாபெரும் அடியாகும். எந்த மடையன்தான் தன்னுடைய திறமையால் மற்றவன் பேர் பெற்றுக்கொள்ள அனுமதிப்பான். இன்று அதன் விழைவு இலங்கை ராணுவம் பெற்ற வெற்றி.இப்போ மக்களின் கேள்வியெல்லாம் பிரபாகரன் பிடிபடுவானா தப்பி ஓடிவிடுவானா அல்லது சயனைட் அடிச்சு மாவீரனாவானா என்பதுதான். பிரபாகரன் என்ன ஆவான் என்பதைவிட மக்கள் விடுதலை என்பது மரணித்து விட்டது என்பது தான் மன வேதனையானது. முற்போக்கு சிந்னையுடன் வர்க்கவிடுதலைக்காக ஆயுதமேந்தியவர்கள் அளிக்கப்பட்டு இன விடுதலைஎன்ற பெயரில் பல்லாயிரக்கணக்கான போராளிகளையும் மக்களையும் வேள்வித் தீயில் போட்டு தன் சுயநலத்திற்காக ஒரு நாட்டின் ஒரு தேசத்தின் எதிர்பார்ப்பையே தீயில் கருக்கிய ஒரு சர்வதேச பயங்கரவாதிக்கு எந்தத்தண்டனைதான் பொருந்தும். எம் கேள்விகள் அடுத்து என்ன செய்யப்படல் வேண்டும் என்று ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும் ஆக்கபூர்வமாக விவாதிக்கப்பட வேண்டும். அந்த விவாதத்தின் வழியாக விடை காணப்படல் வேண்டும். எனது சிந்தனையின் வெளிப்பாடு அடுத்த கட்டுரையில் முன்வைக்கப்படும்


Original post : http://veesuthenral.blogspot.com/

Sunday, January 25, 2009

வீழ்ந்தது முல்லைத்தீவு

இராணுவத்தின் 59 ஆவது படையணி சற்று முன் முல்லைத்தீவை கைப்பற்றி நகரினுள் முன்னேறிச்செல்வதாக இராணுவம் உறுதிசெய்துள்ளது.குளத்தை உடைத்தோம் கோட்டையை உடைத்தோம் என்று சொல்லி சொந்த வீட்டை கைவிட்டுட்டாங்கள் அண்ணமார்.தல முந்தியெண்ணடா குரங்;குகளோட தொத்திக்கொண்டு இருக்கலாம்.உடம்பு பெருத்துப்போனதால பண்டியோட பண்டியாத்தான் இருக்கலாம் இப்ப..